டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் கோவைகிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 76 ஓட்டத்தை வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சை தோற்கடித்தது. திண்டுக்கல் அணி பெற்ற 3-வது வெற்றியாகும். சேலம் 2-வது தோல்வியை தழுவியது.
13-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் கோவைகிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை கிங்ஸ் 5 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது. திருப்பூர் அணி 3 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி 2 இடங்களில் உள்ளன. 2-வது வெற்றிக்காக மதுரை, நெல்லை அணிகள் கடுமை யாக போராடும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar