டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது.
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் மட்டையாட்டம் செய்த திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. அதிக பட்சமாக தினேஷ் 39 ஓட்டங்கள் விளாசினார். கோவை அணி தரப்பில் அபிலேஷ், முகிலேஷ், திவாகர் தலா 2 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. கங்கா ஸ்ரீதர் 30, வெங்கட்ரமணன் 24, சாய் சுதர்சன் 51 ஓட்டங்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் 6 பந்துகளுக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் திருப்பூர் அணியின் கேப்டன் முகமது சிறப்பாக பந்து வீசி 3 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 மட்டையிலக்குடுகளை எடுத்தார். இதனால் அந்த அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
[embedded content]
Source: Maalaimalar