Press "Enter" to skip to content

மான்செஸ்டர் சோதனை – இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

லண்டன்:

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி சோதனை போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற உள்ளது.

இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளர் யோகிஷூக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், உடற்பயிற்சியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்திய வீரர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் தொற்று பரவவில்லை என தெரிய வந்துள்ளது. 

இந்திய வீரர்கள் அனைவருக்கும் கொரோனா கெட்ட என முடிவு வந்துள்ளதால், மான்செஸ்டர் சோதனை போட்டி நடைபெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »