Press "Enter" to skip to content

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல். ராகுல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எவின் லீவிஸ் அறிமுகம் ஆகியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இஷான் பொரேல், எய்டன் மார்கிராம், அடில் ரஷித் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்:

1. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2. எவின் லீவிஸ், 3. சஞ்சு சாம்சன், 4. லியாம் லிவிங்ஸ்டோன், 5. மஹிபால் லாம்லோர், 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. கிறிஸ் மோரிஸ், 9. முஷ்டாபிஜுர் ரஹ்மான், 10. சேத்தன் சகாரியா, 11. கார்த்திக் தியாகி.

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள்:

1. கே.எல். ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. எய்டன் மார்கிராம், 4. நிக்கோலஸ் பூரன், 5. தீபக் ஹூடா, 6. பேபியன் ஆலன், 7. அடில் ரஷித், 8. ஹர்ப்ரீத் பிரார், 9. முகமது ஷமி, 10. அர்ஷ்தீப் சிங், 11. இஷான் பொரேல்.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »