Press "Enter" to skip to content

முதல் போட்டியில் அசத்திய ஓமன்- 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில், முதலில் மட்டையாட்டம் செய்த பப்புவா நியூ கினியா அணி 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அல் அமீரத்:

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில், ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன், பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஓமன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பப்புவா நியூ கினியா அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. துவக்க வீரர்கள் டோனி உரா, லீகா சியாகா இருவரும் ஓட்டத்தை எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள், அதிரடியாக ஆடி ஓட்டத்தை குவித்தனர். குறிப்பாக ஓமன் பந்துவீச்சை சிதறடித்த கேப்டன் ஆசாத் வாலா, 56 ஓட்டங்கள் குவித்தார். சார்லஸ் அமினி 37 ஓட்டங்கள் சேர்த்தார். சேஸ் பாவ் 13 ஓட்டங்களில் மட்டையிலக்குடை இழந்தார். 

அதன்பின்னர் மட்டையிலக்குடுகள் மளமளவெனச் சரிந்தன. இதனால் 20 ஓவர் முடிவில் பப்புவா நியூ கினியா அணி, 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 129 ஓட்டங்கள் சேர்த்தது. ஓமன் தரப்பில் சீஷன் மக்சூத் 4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் அகிப் இல்யாஸ், ஜதிந்தர் சிங் ஆகியோர் அதிரடியாக ஆடி பப்புவா நியூ கினியா பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 

பந்துவீச்சாளர்கள் மாறி மாறி புதிய யுக்திகளை கையாண்டும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. துவக்க வீரர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 38 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை உறுதி செய்தனர். 

ஜதிந்தர் சிங், 42 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 73 ஓட்டங்கள் விளாசினார். அகிப் இல்யாஸ், 43 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்கருடன் 50 ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை ஓமன் பதிவு செய்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »