Press "Enter" to skip to content

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசன்

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான மட்டையிலக்கு மற்றும் 1000-க்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார்.

அல் அமீரத்:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல் சுற்று லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேசம் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன்,  2 மட்டையிலக்கு வீழ்த்தினார். இதன்மூலம், சர்வதேச 20 சுற்றிப் போட்டிகளில் அதிக மட்டையிலக்குடுகள் வீழ்த்திய இலங்கை வீரர் மலிங்காவின் சாதனையை முறியடித்தார். 

மொத்தம் 80 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள ஷாகிப் அல் அசன், மொத்தம் 108 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி உள்ளார். மலிங்கா 107 மட்டையிலக்குடுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

20 ஓவர்  கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான மட்டையிலக்கு மற்றும் 1000-க்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார். உலக சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசனுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

இதேபோல் சோதனை மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக மட்டையிலக்கு வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இவர் சோதனை போட்டிகளில்  800 மட்டையிலக்குடுகள், ஒருநாள் போட்டிகளில் 534 மட்டையிலக்குடுகள் கைப்பற்றி உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »