Press "Enter" to skip to content

தேசிய ஜூனியர் எறிப்பந்து- தமிழக அணிகள் அறிவிப்பு

31-வது தேசிய ஜூனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

31-வது தேசிய ஜூனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில் நடக்கிறது. இந்தப்போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்க தலைவர் டி.பாலவிநாயகம் அறிவித்து உள்ளார். அணி விவரம்:

ஆண்கள்:- சிவபிரசாத் (கேப்டன்), ஜோதீஸ்வரன், பிரவின், ஹேம்நாத் (சென்னை), வீரராகவன், ஹர்மான்(திருவள்ளூர்), யோகேஷ்வரன், விக்னேஷ், மனோ (திண்டுக்கல்), அருண்குமார், ஜிஸ்னு, கிஷோர் (நீலகிரி), ரமணிதரன் (கரூர்), லோகேஸ்வரன் (திருவண்ணாமலை).

பெண்கள்:- பியூலா ஜாய்ஸ் (கேப்டன்), மாலினி, வர்ஷா (செங்கல்பட்டு), இளவேனில், பத்மினி, தீக்‌ஷிதா (சென்னை), ஜெசிந்த் கிப்டி, ஹர்சிதா, பிரியதர்ஷினி (திருவள்ளூர்), இவாஞ்சல் அலின், சஹானா (திண்டுக்கல்), பூஜா (கரூர்), மணிஸ்ரீ (மதுரை), மோனிஷா (திருவண்ணாமலை).

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »