Press "Enter" to skip to content

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாய்:

துபாயில் இன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தனது 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. 

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், மட்டையாட்டம்கை தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர்(1) மற்றும் ஆரோன் பிஞ்ச்(8) தொடக்கத்திலேயே மட்டையிலக்குடை இழந்து வெளியேறினர். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ்(0) கேட்ச் ஆகி வெளியேறினார்.

இவ்வாறு ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து மட்டையிலக்குடுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டீவன் ஸ்மித்-மேக்ஸ்வெல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதத்தைக் கடந்த ஸ்டீவன் ஸ்மித், 57 ஓட்டங்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 37 ஓட்டங்களில் போல்ட் ஆனார். மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் 41 ஓட்டங்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இறுதியாக ஆஸ்திரேலிய அணி 20 சுற்றுகள் முடிவில் 5 மட்டையிலக்குடுகளை இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 2 மட்டையிலக்குடும், புவனேஸ்வர் குமார், ராகுல் சாஹர் மற்றும் ஜடேஜா தலா ஒரு மட்டையிலக்குடும் வீழ்த்தினர். 

இதையடுத்து 153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல்-ரோகித்சர்மா களமிறங்கினர். முதல் மட்டையிலக்குடுக்கு இந்த ஜோடி 68 ஓட்டங்கள் குவித்தது. 39 ஓட்டங்கள் இருந்த நிலையில் ராகுல் கேட்ச் என்ற முறையில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ரோகித் 60 ஓட்டங்கள் எடுத்து ரிட்டேட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் 38, ஹர்திக் பாண்ட்யா 14 ஜோடி அதிரடியாக விளையாடி இந்திய அணியை 9 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அகர் 1 மட்டையிலக்குடை வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »