Press "Enter" to skip to content

இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக
பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடர் முடிந்த நிலையில் தற்போது 2-வது மற்றும் கடைசி சோதனை நடைபெற்று வருகிறது. 7-ந் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 சோதனை, 3 ஒருநாள் போட்டி, நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது. வருகிற 9-ந் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு செல்லும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கங்குலி தலைமையில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடனான  தொடர், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், ஒமைக்ரான் அச்சுறுத்தல்
உள்பட தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா அறிவித்தார். இரு அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த சோதனை, ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் தெரிவிக்கப்பட்டதுடன் இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்று பிசிசிஐ சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »