நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 சுற்றுகள் வீசி
இந்திய அணியின் 10 மட்டையிலக்குகளையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்தார்.
புஜாரா, கேப்டன் விராட் கோலி டக்அவுட்டில் வெளியேறிய நிலையில் இந்திய அணி 90 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 மட்டையிலக்குடுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 221 ஓட்டங்கள் அடித்திருந்தது. மயங்க் 120 ரன்களுடனும், சகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாளான இன்று காலை மேலும் 2 ஓட்டங்கள் சேர்த்திருந்த நிலையில் சகா ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஓட்டத்தை எதுவும் எடுக்காமல் அஜாஸ் படேல் பந்துவீச்சிற்கு மட்டையிலக்குடை பறிகொடுத்தார். பின்னர் வந்த அக்ஸர் படேல் மயங்க் அகர்வால் உடன் ஜோடி சேர்ந்து ஓட்டத்தை குவிப்பில் ஈடுபட்டார்.
அரைசதம் அடித்த அக்ஸர் மேலும் 2 ரன்களை சேர்த்தநிலையில் ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து விளையாடிய மயங்க் அகர்வால் 150 ரன்களை குவித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் மட்டையிலக்குடை இழந்தார். மயங்க் அடித்த 150 ஓட்டங்களில் 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களும் அடங்கும். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேற இந்திய அணியின் முதல் சுற்று 325 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
இந்தப் போட்டியில் மும்பையை பூர்வீகமாக கொண்ட நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 சுற்றுகள் வீசி இந்திய அணியின் 10 மட்டையிலக்குகளையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar