Press "Enter" to skip to content

அடிலெய்டு சோதனை – ஆஸ்திரேலியா முதல் பந்துவீச்சு சுற்றில் 473 ஓட்டங்கள் குவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு சோதனை போட்டியில் ஆஸ்திரேலியா முதல் பந்துவீச்சு சுற்றில் லாபஸ்சேன் சதமடித்து அசத்தினார்.

அடிலெய்டு:

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது சோதனை அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல்- இரவு போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்தது.

டேவிட் வார்னர், லாபஸ்சேன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி172 ஓட்டங்கள் சேர்த்தது. வார்னர் 95 ஓட்டத்தில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் லாபஸ்சேனுடன் ஜோடி சேர்ந்தார். லாபஸ்சேன் சதம் அடித்தார். அவர் 103 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மித் 93 ஓட்டத்தில் வெளியேறினார். மட்டையிலக்கு கீப்பர் அலெக்ஸ் கேரி அரை சதமடித்து 51 ஓட்டத்தில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் மைக்கேல் நீசர் அதிரடியாக ஆடி 35 ஓட்டங்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலியா அணி 9 மட்டையிலக்கு இழப்புக்கு 479 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 மட்டையிலக்குடும், ஆண்டர்சன் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹமீத் 6 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 4 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 2 மட்டையிலக்கு இழப்புக்கு 17 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »