Press "Enter" to skip to content

ஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசாவை வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது சென்னை

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி அணி இதுவரை 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

கோவா:

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், ஒடிசா அணியும் மோதின.

இதில் சென்னையின் எப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. சென்னை சார்பில் ஜெர்மன்பிரீத் சிங் 23-வது நிமிடத்திலும் மிர்லன் முர்செவ் 63-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா சார்பில் ஜாவி ஹெர்னான்டஸ் 90+6 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 11 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »