Press "Enter" to skip to content

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் வெற்றி தொடருமா? கேரளாவுடன் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி.- கேரளா அணிகள் மோதுகின்றன.

கோவா:

8-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை, சென்னை, மோகன்பகான் உள்பட 11 அணிகள் பங்கேற்றுள்ளன.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான (2015, 2018)சென்னையின் எப்.சி.- கேரளா அணிகள் மோதுகின்றன. சென்னை அணி இதுவரை விளையாடிய 6 போட்டியில் 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என 11 புள்ளிகள் பெற்றுள்ளது.

கடந்த ஆட்டத்தில் அந்த அணி ஒடிசாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. சென்னை அணியின் வெற்றி இன்றும் தொடருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

கேரளா அணி இதுவரை விளையாடிய 6 போட்டியில் 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் உள்ளது. கடந்த ஆட்டத்தில் அந்த அணி மும்பை அணியை வீழ்த்தி உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »