லங்கா பிரீமியர் லீக்கில் காலே கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக ஜாஃப்னா கிங்ஸ் வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ, காட்மோர் ஆகியோர் அரைசதமடித்து அசத்தினர்.
ஹம்பந்தோட்டா:
லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் – காலே கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 3 மட்டையிலக்கு இழப்புக்கு 201 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ அரை சதமடித்து 63 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். காட்மோர் 57 ஓட்டத்தில் அவுட்டானார். மட்டையிலக்கு கீப்பர் குர்பாஸ் 35 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து, 202 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காலே கிளாடியேட்டர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தனுஷ்கா குணதிலகா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 54 ஓட்டங்கள் எடுத்தார். குசால் மெண்டிஸ் 39 ஓட்டத்தை எடுத்தார். மற்றவர்கள் சீரான இடைவெளியில் மட்டையிலக்குடை பறிகொடுத்தனர்.
இறுதியில், காலே கிளாடியேட்டர்ஸ் அணி 9 மட்டையிலக்கு இழப்புக்கு 178 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ஜாஃப்னா அணி சார்பில் வஹிந்து ஹசரங்கா, சதுரங்கா டி சில்வா ஆகியோர் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar