Press "Enter" to skip to content

கோலிக்கு பந்து வீசுவது கடினமானது – தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் சொல்கிறார்

உலக கிரிக்கெட்டில் முதல் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கு பந்து வீசபோகிறேன் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார்.

செஞ்சூரியன்:

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 சோதனை மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

முதல் சோதனை போட்டி வருகிற 26-ந்தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்திய சோதனை கேப்டன் விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமானது என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டுவான் ஒலிவியர் தெரிவித்துள்ளார்.

உலக தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிரான இந்த தொடர் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தொடர் இருக்கும். இது ஒரு உற்சாகமான சவால். விராட் கோலிக்கு பந்து வீசுவது கடினமாக இருக்கும். ஆனால் அதை உற்சாகமாக எதிர்பார்க்கிறேன்.

உலக கிரிக்கெட்டில் முதல் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கு பந்து வீசபோகிறேன். என்னை பொறுத்தவரை முதல் போட்டியில் சிறப்பாக செயல்படுவது முக்கியம்.

இங்குள்ள சூழ்நிலையை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »