Press "Enter" to skip to content

புரோ கபடி சங்கம்: தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றி பெறுமா? பெங்களூருடன் இன்று மோதல்

தமிழ் தலைவாஸ் அணி மோதிய தொடக்க ஆட்டம் சமனில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் இன்று களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூரில் நடந்து வருகிறது.

இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் அணி மோதிய தொடக்க ஆட்டம் (தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக) சமனில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் இன்று களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணி தனது முதல் ஆட்டத்தில் யு மும்பை அணியிடம் தோற்றது.

இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை- தபாங் டெல்லி அணிகளும், இரவு 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்- குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »