Press "Enter" to skip to content

விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாட்டை வீழ்த்தி இமாசல பிரதேசம் முதல் முறையாக சாம்பியன்

குறைந்த வெளிச்சத்தின் காரணமாக விஜேடி முறையின் அடிப்படையில் இமாசல பிரதேச அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் 2021-2022 ஆண்டிற்கான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் தமிழ்நாடு, இமாசல பிரதேசம் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் முதலில் மட்டையாட்டம் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவர்களின் அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்து 314 ஓட்டங்கள் எடுத்தது.  தினேஷ் கார்த்திக் அதிகபட்சமாக 116 ஓட்டங்கள் எடுத்தார்.

இதை தொடர்ந்து 50 ஓவர்களில் 315 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இமாசல பிரதேச அணி களமிறங்கியது. அந்த அணி 47.3 ஓவர்களில் 4 மட்டையிலக்குடுகள் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் குறைந்த வெளிச்சம் காரணமாக விஜேடி முறையின் அடிப்படையில் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  

இதன்மூலம் முதல்முறையாக விஜய் ஹசாரே கோப்பையை இமாசல பிரதேசம் வென்றுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »