நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் அணி உ.பி. அணியை வீழ்த்தியது.
பெங்களூரு:
8-வது புரோ கபடி சங்கம் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்து போட்டியை சமனில் முடித்தது. இரண்டாவது போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 30-38 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, யு மும்பா அணியை எதிர்கொண்டது. இதில் 30-30 என ஆட்டம் சமனிலையில் முடிந்தது.
இரவு 8.30 மணிக்கு நடந்த மற்றொரு போட்டியில் யுபி யோதா அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் ஜெய்ப்பூர் அணி 32-29 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் அணி பெற்ற 2வது வெற்றி இதுவாகும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar