Press "Enter" to skip to content

ஜூனியர் ஆசிய கோப்பை – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஹர்னூர் சிங், ரகுவன்ஷி ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 104 ரன்களை சேர்த்தது.

துபாய்:

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான்  அணிகள் மோதின. 

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 மட்டையிலக்குடுக்கு 259 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் இஜாஸ் அகமது 86 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சுலைமான் சபி 73 ரன்னுடன் அவுட்டானார். 

இந்தியா சார்பில் ராஜ்வர்தன் , கௌஷல் தாம்பே , விக்கி  மற்றும் ராஜ் பாவா ஆகியோர் தலா 1 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

இதையடுத்து, 260 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹர்னூர் சிங் – ரகுவன்ஷி ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஹர்னூர் சிங் 65 ரன்களும் , ரகுவன்ஷி 35 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின், ஜோடி சேர்ந்த  ராஜ் பாவா, கௌஷல் தாம்பே  ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், இந்திய அணி 48.2 ஓவர்களில் 6 மட்டையிலக்குடுக்கு 262 ஓட்டங்கள் அடித்து 4 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 21 ஓட்டத்தை வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »