Press "Enter" to skip to content

ரிஷாப் பண்ட் ‘டக்அவுட்’: கவுதம் காம்பீர் சாடல்

ஒருவரை ஸ்லெட்ஜிங் செய்வது எளிதான விசயம், அதே சமயத்தில் உங்கள் கையில் பேட் இருக்கும்போது எதிர்கொள்வது கடினமானது என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. முதல் பந்துவீச்சு சுற்றில் இந்தியா 202 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. ரிஷாப் பண்ட் 17 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

தென்ஆப்பிரிக்கா முதல் பந்துவீச்சு சுற்றில் 229 ஓட்டங்கள் சேர்த்தது. 27 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது பந்துவீச்சு சுற்றில் மட்டையாட்டம் செய்தது. புஜாரா (53), ரகானே (58) அரைசதம் அடித்த போதிலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. ஹனுமா விஹாரி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் இந்தியா 266 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்தியா 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 163 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது ரிஷாப் பண்ட் களம் இறங்கினார். அவர் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். களம் இறங்கியதும் தென்ஆப்பிரிக்க வீரர் வான் டெர் டஸ்சன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்த பந்து ஹெல்மட்டை தாக்கியது. ரபடா வீசிய அடுத்த ஷாட் பிட்சி பந்தை தூக்கி அடிக்க நினைத்தார். ஆனால் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது எதிரணி வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொறுப்பற்ற தன்மையுடன் ஆட்டமிழந்ததால், ரிஷாப் பண்ட்-ஐ கவுதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.

ரிஷாப் பண்ட் குறித்து கவுதம் கம்பீர் கூறுகையில் ‘‘யாராவது ஒருவரை ஸ்லெட்ஜிங் செய்வது மிகவும் எளிதான விசயம். அதேபோல், உங்களுடைய கையில் பேட் கொடுக்கப்பட்டு, எதிரணி பந்து வீச்சை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்போது அது மிகவும் கடுமையான விசயமாக இருக்கும்.

இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த நிலையில், ரிஷாப் பண்ட் சண்டை போடுவதை விட்டுவிட்டு, மிகப்பெரிய சுற்று விளையாடுவதைத்தான் நான் விரும்பியிருப்பேன்.

என்னைப் பொறுத்த வரைக்கும் ஏமாற்றம் என்பது மிக மிக குறைத்து மதிப்பிடும் சொல் எனக் கருதுவேன். ஏனென்றால், இந்த வகையில் நீங்கள் சோதனை கிரிக்கெட் விளையாட முடியாது. சோதனை கிரிக்கெட் என்பது கற்றுக் கொள்வது. இந்தியாவில் இளம் வீரர்கள் டீன் எல்கரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், தலைசிறந்த அணிக்கெதிராக விளையாடும்போது எளிதான ஓட்டங்கள் சேர்த்து விட முடியாது’’ என்றார்.

டீன் எல்கர் 121 பந்தில் 46 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளார். தென்ஆப்பிரிக்கா அணி 2-வது பந்துவீச்சு சுற்றில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 118 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 122 ஓட்டங்கள் தேவை. கைவசம் 8 மட்டையிலக்குடுகள் உள்ளன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »