Press "Enter" to skip to content

ஐஎஸ்எல் கால்பந்து – சென்னையை வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது கோவா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கோவா எப்.சி அணி இதுவரை 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

கோவா:

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், எப்.சி. கோவா அணியும் மோதின.

முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இரண்டாவது பாதியின் 82-வது நிமிடத்தில் கோவா அணியின் ஆர்டிஸ் மெண்டோசா ஒரு கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

கோவா அணி தான் ஆடிய 10 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி, 3 டிரா என மொத்தம் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

மற்றொரு போட்டியில் ஏ.டி.கே மோகன் பாகான் மற்றும் ஒடிசா அணிகள் மோத இருந்தன. ஆனால், மோகன் பாகான் அணியில் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் போட்டி ரத்து  செய்யப்பட்டது. இந்த போட்டி வேறு ஒரு தேதியில் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது . 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »