புரோ கபடி சங்கம் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு புல்ஸ் அணி 7 வெற்றி, 3 தோல்வி, 1 டிரா என மொத்தம் 39 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளது.
பெங்களூரு:
12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் யுபி யோதா, புனேரி பல்டான் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதலே உ.பி. அணி அதிரடியாக விளையாடியது. இதனால் 50 – 40 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உ.பி. அணி புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் புனே அணி 10ம் இடத்தில் உள்ளது.
மற்றொரு போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 28 -27 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்கால் அணி 5வது வெற்றியை பதிவுசெய்தது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar