Press "Enter" to skip to content

நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடர் மார்ச் மாதம் தொடங்கும் – ஜெய்ஷா

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தாண்டு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அறிமுகமாகின்றன. ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவில் நடத்தவே விரும்புவதாக ஐபிஎல் அணி உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்தியாவில் நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடரை நடத்துவதில் தான் உறுதியாக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் இல்லாமல் மும்பையில் மட்டும் போட்டிகளை நடத்தலாம் என தகவல்கள் வெளியாகின.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »