Press "Enter" to skip to content

ஆஸ்திரேலிய ஓபன்: நடால், மேடிசன் கெய்ஸ் அரை இறுதிக்கு முன்னேற்றம்

ஐந்தாவது செட் வரை நீடித்த ஆட்டத்தில் கடும்போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்று ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கிராண்ட் சிலாம் போட்டியில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 4-வது வரிசையில் உள்ள பார்பரா கிரஞ்கோவா (செக் குடியரசு)- 51-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கெய்ஸ் மோதினார்கள்.

இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிரஞ்கோவா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். மேடிசன் கெய்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கிரஞ்கோவாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

26 வயதான மேடிசன் கெய்ஸ் 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். இதற்கு முன்பு 2015-ல் அவர் முன்னேறி இருந்தார். தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மிகுந்த முன்னேற்றம் அடைந்து இந்த நிலைக்கு வந்துள்ளார்.

கிரஞ்கோவா கடந்த ஆண்டு பிரெஞ் ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். தற்போது அவரது ஆட்டம் கால் இறுதியோடு முடிந்து விட்டது.

மேடிசன் கெய்ஸ் அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) அல்லது ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) சந்திக்கிறார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் நடால் டென்மார்க்கின் டெனிஸ் ஷபோவாலோவை எதிர்கொண்டார். இதில் முதல் இரண்டு செட்களையும் நடால் 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் கைப்பற்றினார். ஆனால், அடுத்த இரண்டு செட்டையும் 4-6, 3-6 என இழந்தார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட் நடத்தப்பட்டது. இந்த செட்டை நடால் 6-3 எனக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »