Press "Enter" to skip to content

சச்சின் டெண்டுல்கர் இன்னும் ஒரு லட்சம் ஓட்டத்தை அடித்திருப்பார் – அக்தர் ஏன் இப்படி சொன்னார்?

ஐ.சி.சி.யின் தற்போதைய விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகங்களை அளிக்கிறது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்தார்.

புதுடெல்லி:

முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் யூடியூப் சேனல் வாயிலாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் உரையாடினார். அப்போது அவர் ஐ.சி.சி.யை சாடினார். அப்போது அவர் கூறியதாவது: 

இப்போது 3 ரிவியூக்களை அனுமதிக்கிறார்கள். சச்சின் காலத்தில் 3 ரிவியூக்கள் வைத்திருந்தால் அவர் 1 லட்சம் ரன்களை எடுத்திருப்பார்.

டெண்டுல்கர் ஒரு கடினமான பேட்ஸ்மேன். அவர் சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு சகாப்தத்தில் ஆடினார்.

அவருக்காக நான் உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன். இதற்கு காரணம், அவர் ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோருக்கு எதிராக விளையாடினார். ஷேன் வார்னுக்கு எதிராக விளையாடினார். பிரெட் லீ மற்றும் ஷோயப் அக்தர் ஆகியோரை எதிர்கொண்டார்.

அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினார். அதனால்தான் அவரை மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என அழைக்கிறேன் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »