Press "Enter" to skip to content

புரோ கபடி சங்கம் போட்டி: 14-வது வெற்றி ஆர்வத்தில் பாட்னா – தெலுங்கு டைட்டன்சுடன் இன்று மோதல்

புரோ கபடி சங்கம் போட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்ஸ்- புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி 9-வது வெற்றிக்காகவும், புனே அணி 11-வது வெற்றிக்காகவும் காத்து இருக்கின்றன.

பெங்களூர்:

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

நேற்று நடந்த ஆட்டங்களில் அரியானா 37-26 என்ற கணக்கில் மும்பையையும், பெங்களூரு புல்ஸ் 45-37 என்ற கணக்கில் ஜெய்ப்பூரையும், குஜராத் 38-31 என்ற கணக்கில் உ.பி.யோதாவையும் தோற்கடித்தன.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பாட்னா அணி 13 வெற்றி, 1 டை, 4 தோல்வியுடன் 70 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணி பலவீனமான தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 14-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

தெலுங்கு டைட்டன்ஸ் 1 வெற்றி, 4 டை, 14 தோல்வியுடன் 27 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி- உ.பி.யோதா அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி 10 வெற்றியுடன் 65 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 11-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. உ.பி. அணி 8 வெற்றியுடன் 58 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தில் உள்ளது. பாட்னாவை வீழ்த்தி 9-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.

இரவு 9.30 மணிக்கு நடைபெறும் 3-வது ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்ஸ்- புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி 9-வது வெற்றிக்காகவும், புனே அணி 11-வது வெற்றிக்காகவும் காத்து இருக்கின்றன. 

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »