Press "Enter" to skip to content

புரோ கபடி சங்கம் : ஜெய்ப்பூர், பாட்னா அணிகள் வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்டன் அணி 41-31 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது

பெங்களூரு:

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில்  ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி,  யு மும்பா அணியை 44-28 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸின் கடுமையான சவாலை முறியடித்த பாட்னா பைரேட்ஸ் அணி 36-34 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 

நேற்று இரவு நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில்  புனேரி பல்டன் அணி  41-31 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »