Press "Enter" to skip to content

திருமணத்தால் பாகிஸ்தான், ஐ.பி.எல் முதல் பகுதி ஆட்டங்களை மிஸ் செய்யும் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஐ.பி.எல். தொடரின் முதல் பகுதி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். இவர் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். மேக்ஸ்வெல் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போது இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார்.

இந்தத் தொடர் முடிந்த உடன் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் சென்று விளையாடுகிறது. அதன்பின் ஐபிஎல் தொடர் வருகிறது. திருமணம் செய்ய இருப்பதால் பாகிஸ்தான் தொடர் முழுவதிலும் விளையாடுவதில்லை என மேக்ஸ்வெல் முடிவு செய்துள்ளார்.

அதேபோல் ஐ.பி.எல். தொடரில் முதல் பகுதி ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதால், மேக்ஸ்வெல் கேப்டனுக்கான போட்டியில் முன்னணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் திருமணம் செய்ய இருப்பதால் ஆர்.சி.பி. சில போட்டிகளுக்கு வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 5-ந்தேதி முடிவடைகிறது. மார்ச் கடைசி வாரத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதனால் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், ஹேசில்வுட், மேத்யூ வடே, டேனியல் சாம்ஸ் போன்றோர் ஐ.பி.எல். தொடரின் தொடக்க போட்டிகளில் விளையாட வாய்ப்வில்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »