Press "Enter" to skip to content

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடரை வெல்லுமா? இன்று 2-வது டி20 போட்டி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 சுற்றிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

கொல்கத்தா:

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணியை முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து சாதித்தது.

மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 சுற்றிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி விண்மீன் விளையாட்டு சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டையாட்டம் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கி‌ஷன் ஆகியோர் மட்டையாட்டம்கிலும், ரவிபிஷ்னோய், ஹர்‌ஷல் படேல், யசுவேந்திர சாஹல், புவனேஸ்வர் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

ஸ்ரேயாஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்களுக்கு தொடக்க ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் செய்யப்பட்டால் அவர்கள் விளையாடலாம். ஆனால் அணியில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இன்றைய ஆட்டம் முக்கியமானது. வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோல்வி அடைந்தால் அந்த அணி தொடரை இழந்துவிடும். இதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.

20 சுற்றிப் போட்டிக்கேற்ற சிறந்த அதிரடி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் தன்மையை மாற்ற முடியும். இதனால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »