Press "Enter" to skip to content

புரோ கபடி சங்கம் – குஜராத், பெங்களூர், புனே அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின

புரோ கபடி சங்கம் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பெங்களூர்:

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 22 ஆட்டம் இருக்கும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ள பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில், நேற்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன. இதனால் புள்ளிப்பட்டியலில் குஜராத்  ஜெயண்ட்ஸ் 4-வது இடமும், 

பெங்களூர் புல்ஸ் 5வது இடமும், புனேரி பல்தான் 6வது இடமும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

தமிழ் தலைவாஸ் 47 புள்ளிகள பெற்று 11வது இடத்தைப் பிடித்துள்ளது.

நாளை நடைபெறும் எலிமினேட்டர் 1 சுற்றில் உபி யோதா அணியும், புனேரி பால்டன் அணியும் மோதுகின்றன. எலிமினேட்டர் 2 சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணிகள் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி அணியுடன் மோதவுள்ளன.

புரோ கபடி சங்கம் தொடரின் இறுதிப்போட்டி வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »