Press "Enter" to skip to content

புரோ கபடி சங்கம் – உ.பி. யோதா, பெங்களூர் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

புரோ கபடி சங்கம் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறின.

பெங்களூர்:

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத்  ஜெயண்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனேரி பல்தான் ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில், நேற்று எலிமினேட்டர் சுற்றுகள் நடைபெற்றன.

முதல் சுற்றில் உ.பி. யோதா அணியும், புனேரி பால்டன் அணியும் மோதின. இதில் உபி யோதா அணி 42 -31 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு எலிமினேட்டர் சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின. இதில் அதிரடியாக ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி 49 -29 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்சுடன் உ.பி. யோதா அணியும், தபாங் டெல்லி அணியுடன் பெங்களூரு புல்ஸ் அணியும் மோதவுள்ளன.

புரோ கபடி சங்கம் தொடரின் இறுதிப்போட்டி வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »