Press "Enter" to skip to content

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டி ரஷியாவில் இருந்து இட மாற்றம்

உக்ரைனில் உள்ள கால்பந்து வீரர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

லண்டன்:

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மே 28-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டியை ரஷியாவிற்கு பதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்த ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் அவசர செயற்குழுவில் முடிவு செய்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை ரஷியா மற்றும் உக்ரைன் கிளப் அணிகள் மற்றும் அந்த நாட்டு தேசிய அணிகளின் போட்டியை பொதுவான இடத்தில் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் ஐரோப்பிய கால்பந்தின் மதிப்புமிக்க சாம்பியன்ஸ் லீக் போட்டியை பிரான்சுக்கு மாற்றுவதற்கு தனது தனிப்பட்ட ஆதரவையும், ஈடுபாட்டையும் காட்டிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரானுக்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது.

உக்ரைனில் இருந்து கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை மீட்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசுடன் இணைந்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு முழுமையான ஆதரவு அளிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »