பெண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நிஹாத் ஜரீன் 4-1 என்ற கணக்கில் துருக்கியின் நாஸ் காகியாக்லுவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
நிஹாத் ஜரீன்- நித்து
புதுடெல்லி:
73-வது குழல்ண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நிஹாத் ஜரீன் 4-1 என்ற கணக்கில் துருக்கியின் நாஸ் காகியாக்லுவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரைஇறுதியில் இந்திய வீராங்கனை நித்து (48 கிலோ பிரிவு), உக்ரைனின் ஹன்னா ஒகோட்டாவை வெளியேற்றினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய வீராங்கனை இருவருக்கும் குறைந்தது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar