பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட இலங்கை அணி கேப்டன் தசுன் சனகா 19 பந்துகளில் 47 ஓட்டங்கள் விளாசினார்.
தரம்சாலா:
இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி முதலில் மட்டையாட்டம் செய்தது.
துவக்க வீரர்கள் பதும் நிசங்கா, தனுசா குணதிலக இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குணதிலக 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அசலங்கா (2), கமில் மிஷாகா (1), சண்டிமல் (9) என சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகினர். எனினும், மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய நிசங்கா 75 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி நேரத்தில் பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட கேப்டன் தசுன் சனகா 19 பந்துகளில் 47 ஓட்டங்கள் (நாட் அவுட்) விளாச, இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 மட்டையிலக்குடுகளை இழந்து 183 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து 184 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar