Press "Enter" to skip to content

ராணுவத்தில் சேர்ந்த உக்ரைன் டென்னிஸ் வீரர்

ரஷியா உக்ரைன் மக்களைக் கொல்கிறது. இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா 4வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, ரஷியாவுக்கு எதிரான முழு ராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் ராணுவ அதிகாரிகளுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.

ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள  நபர்களின் எண்ணிக்கை மற்றும் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அதிபரின் அழைப்பை ஏற்று உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்கி ஸ்டாகோவ்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட தனது நாட்டு ராணுவத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »