Press "Enter" to skip to content

மாநில அளவிலான கைப்பந்து போட்டி- சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

மருத்துவர் சிவந்தி கிளப் சார்பில் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு முதலாவது மாநில அளவிலான கைப்பந்து போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.

சென்னை:

நெல்லை நண்பர்கள் கிளப் மற்றும் மருத்துவர் சிவந்தி கிளப் சார்பில் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு முதலாவது மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. வருகிற 6-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த போட்டி நடைபெறுகிறது.

ஆண்கள் பிரிவில் நடைபெறும் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் எஸ்.ஆர்.எம். , எஸ்.டி.சி. (பொள்ளாச்சி), செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங், டி.ஜி.வைஷ்ணவா, சத்ய பாமா, லயோலா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

பெண்கள் பிரிவில் மருத்துவர் சிவந்தி கிளப், எஸ்.ஆர்.எம், பி.கே.ஆர், எஸ்.டி.ஏ.டி, ஜி.கே.எம், பாரதியார் கிளப் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடைபெறுகிறது. வெற்றிபெற்ற அணிகளுக்கு ஏ.கே.சித்திர பாண்டியன் நினைவு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.

மேற்கண்ட தகவலை போட்டி அமைப்புக் குழுச் செயலாளர் பி.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »