Press "Enter" to skip to content

முதல் சோதனை: இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி மட்டையாட்டம் தேர்வு

இலங்கை அணிக்கெதிரான முதல் சோதனை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று மட்டையாட்டம்கை தேர்வு செய்துள்ளார்.

மொகாலி:

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது சோதனை போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது. 

உலக சோதனை சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய பிறகு ரோகித் சர்மா மூன்று வடிவிலான போட்டிக்கும் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்தியா அடியெடுத்து வைக்கும் முதல் சோதனை போட்டி இதுவாகும். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட்டம் செய்வதாக அறிவித்தது. 

இரு அணி வீரர்கள் பட்டியல்:

இந்தியா: ரோஹித் சர்மா (கே), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

இலங்கை: திமுத் கருணாரத்னே (கே), லஹிரு திரிமான்னே, பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமாரா.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »