Press "Enter" to skip to content

100-வது தேர்வில் விராட் கோலி ஏமாற்றம்: 45 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்

மொகாலியில் நடைபெற்று வரும் இலங்கை எதிரான சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் விராட் கோலி 45 ஓட்டங்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பிடித்திருந்தனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மட்டையாட்டம் தேர்வு செய்தார்.

அதன்படி மயங்க் அகர்வால்- ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 9.5 சுற்றில் 52 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 28 பந்தில் 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹனுமா விஹாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மயங்க் அகர்வால் 33 ஓட்டத்தில் வெளியேறினார். அப்போது இந்தியா 2 மட்டையிலக்கு இழப்பிற்று 180 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

3-வது மட்டையிலக்குடுக்கு ஹனுமா விஹாரி உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலிக்கு இது 100-வது சோதனை ஆகும். 100-வது தேர்வில் சதம் விளாசி, 2019-ம் ஆண்டில் இருந்து சதமடிக்காத வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 76 பந்துகளை சந்தித்து 45 ஓட்டங்கள் எடுத்து க்ளீன் போல்டானார். இதன்மூலம் 100-வது டெஸ்டின் முதல் பந்துவீச்சு சுற்றில் அரைசதம் கூட அடிக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அரைசதம் அடித்த ஹனுமா விஹாரி 58 ஓட்டத்தில் வெளியேறினார்.

தற்போது இந்தியா 57 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரிஷாப் பண்ட் 17 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »