Press "Enter" to skip to content

தானிப்பாடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற மனைவி

தானிப்பாடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம்  தானிப்பாடி அருகே உள்ள ஆண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40 )கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ரேவதி (32)இவர்களுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில்  முதல் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்துவந்தனர்.

ராஜேந்திரனுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்தார். இதுபற்றி தனது உறவினர் வல்லரசு என்பவரிடம் ரேவதி தெரிவித்திருந்தார். இருவரும் சேர்ந்து ராஜேந்திரனை கொலை செய்யத் திட்டமிட்டனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு ரேவதி மது போதையில் இருந்த ராஜேந்திரன் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார் அவருக்கு வல்லரசு உதவி புரிந்துள்ளார். 

ராஜேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது ராஜேந்திரன் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தானிப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ராஜேந்திரன் தனது மனைவி ரேவதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததும். இதனால் ஆத்திரமடைந்த ரேவதி மற்றும் அவரது உறவினர் வல்லரசு ஆகிய இருவரும் சம்பவத்தன்று ராஜேந்திரனை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

அதன்பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கொலை செய்ய முயன்ற ரேவதி மற்றும் வல்லரசு ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தண்டராம்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப் பட்டனர். இந்த சம்பவம் தண்டராம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.v

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »