Press "Enter" to skip to content

மொகாலி சோதனை போட்டி: இந்தியா 574 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் – ஜடேஜா 175 நாட் அவுட்

இலங்கை அணிக்கு எதிரான முதல் சோதனை போட்டியில் இந்திய அணி வீரர் ஜடேஜா 175 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

மொகாலி:

இந்தியா-இலங்கை அணிகள் போதும் முதல் சோதனை கிரிக்கெட் போட்டி மொகாலியில் நேற்று தொடங்கியது.

முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 மட்டையிலக்கு இழப்புக்கு 357 ஓட்டத்தை குவித்து இருந்தது.

ரி‌ஷப்பண்ட் ஆட்டம் அதிரடியாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சதத்தை தவறவிட்டார். அவர் 97 பந்தில் 96 ரன்னும் (9 பவுண்டரி, 4சிக்சர்), விஹாரி 58 ரன்னும் எடுத்தனர். 100-வது தேர்வில் ஆடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 45 ஓட்டத்தை எடுத்தார்.

ரவீந்திர ஜடேஜா 45 ரன்னுடனும், அஸ்வின் 10 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ரி‌ஷப்பண்ட்டும் , ஜடேஜாவும் 5 வது மட்டையிலக்குடுக்கு 104 ஓட்டத்தை எடுத்தது முக்கியமானதாகும்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

ஜடேஜா, அஸ்வின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக ஜடேஜா அபாரமாக ஆடினார். அவர் 87 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ஓட்டத்தில் தொட்டார்.

இருவரது ஆட்டத்தால் இந்தியா ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய அஸ்வின் அரை சதம் அடித்தார். அவர் 61 ஓட்டங்கள் எடுத்திருந்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜெயந்த் யாதவ் 2 ஓட்டத்தில் வெளியேறினார்.

இந்நிலையில் ஜடேஜாவுடன் முகமது சமி ஜோடி சேர்ந்து ஆடினார். சமி நிதானமாக விளையாட ஜடேஜா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இந்திய அணி 574 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

ஜடேஜா 175 ரன்னிலும் சமி 20 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் லக்மல், பெர்னாண்டோ, எம்புல்தெனியா தலா 2 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »