Press "Enter" to skip to content

மகளிர் உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஹெய்ன்ஸ் சதம் அடித்தார்.

ஹாமில்டன்:

12-வது பெண்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்த போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கி ஆடியது. தொடக்க வீராங்கனை ஹெய்ன்ஸ் 130 ரன்களும் கேப்டன் லனிங் 86 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 310 ஓட்டங்கள் குவித்தது. 311 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

தொடக்கமே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரின் 4-வது பந்தில் லாரன் வின்ஃபீல்ட் ஹில் ஓட்டத்தை ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த டாமி பியூமண்ட்- நைட் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய பியூமண்ட் அரை சதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 74 ஓட்டங்கள் எடுத்த போது வெளியேறினார்.

சீரான இடைவெளியில் மட்டையிலக்குடுகள் சரிந்தாலும் ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய நடாலி ஸ்கிவர் 109 ரன்களை கடந்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 298 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »