ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக், அசார் அலி ஜோடி 208 ரன்களை சேர்த்துள்ளது.
ராவல்பிண்டி:
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து 3 சோதனை போட்டிகள், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மட்டையாட்டம் தேர்வு செய்தார்.
அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா, இமாம் உல் ஹக் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 105 ரன்களை சேர்த்தது. அப்துல்லா 44 ஓட்டங்களில் அவுட்டானார்.
அவரை தொடர்ந்து இமாம் உல் ஹக் உடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அசத்தலாக விளையாடியது. இமாம் உல் ஹக் சதமடித்து அசத்தினார். அவர் 157 ஓட்டத்தில் வெளியேறினார்.
அதன்பின், அசார் அலியுடன் பாபர் அசாம் இணைந்தார். இந்த ஜோடியும் 100 ரன்களை சேர்த்த நிலையில், பாபர் அசாம் 36 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய அசார் அலி 185 ஓட்டத்தில் அவுட்டானார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 4 மட்டையிலக்கு இழப்புக்கு 474 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முகமது ரிஸ்வான் 29 ரன்னுடனும், இப்திகார் அகமது 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை விளையாடி வருகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar