Press "Enter" to skip to content

எம்.எஸ்.டோனி ஏன் பதவி விலகினார்? – சிஎஸ்கே அணியின் சிஇஓ விளக்கம்

கேப்டன் என்ற முறையில் சி.எஸ்.கே. மீது அக்கறை கொண்டுள்ள டோனி, அணியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார் என சி.எஸ்.கே. சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

புதுடெல்லி:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி திடீரென விலகினார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியது. இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்பட உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் அளித்த பேட்டி வருமாறு:

எம். எஸ்.டோனியின் முடிவை நாங்கள் எப்போதும் மதித்து வருகிறோம். அவர் எங்களுக்கு ஒரு தூணாக இருக்கிறார். தொடர்ந்து அப்படியே இருப்பார்.

கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க இது சரியான நேரம் அவர் உணர்ந்ததால் அதை செய்துள்ளார். இந்த முடிவை எடுத்தது அவர்தான்.

டோனியின் முடிவு எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. இதுதொடர்பாக நாங்கள் க்டந்த ஆண்டே விவாதித்துள்ளோம்.

ஜடேஜாவை அவர் இந்த தொடரில் வழிநடத்துவார். அணிக்கும் ஒரு சீனியர் வீரராக இருந்து வழிநடத்துவார்.

ஐ.பி.எல்.லில் டோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தொடர்ந்து அவர் விளையாடுவார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »