Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கியது- முதல் ஆட்டத்தில் சென்னை அணி மட்டையாட்டம்

ஜடேஜா தலைமையிலான சென்னை அணியில் கான்வே, பிராவோ, மில்னே, சான்ட்னர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை:

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. இந்த பருவத்தில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆனதால், பங்குபெறும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் மட்டையாட்டம் செய்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாகி இருக்கிறார். சென்னை அணியில் கான்வே, பிராவோ, மில்னே, சான்ட்னர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கொல்கத்தா அணியில் பில்லிங்ஸ், ரஸ்ஸல், நரைன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள், ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய டோனி, ஒரு வீரராக களமிறங்குகிறார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »