Press "Enter" to skip to content

ஐபிஎல் 2022 – 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் பிராவோ 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

மும்பை:

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 5 மட்டையிலக்குடுக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது. எம்.எஸ்.டோனி 50 ரன்னும், உத்தப்பா 28 ரன்னும், ஜடேஜா 26 ரன்னும் எடுத்தனர். டோனி 38 பந்துகளில் அரை சதத்தை பதிவுசெய்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.

கொல்கத்தா சார்பில் உமேஷ் யாதவ் 2 மட்டையிலக்குடும், வருண் சக்கரவர்த்தி, ரஸ்ஸல் தலா ஒரு மட்டையிலக்குடும் எடுத்தனர்.

இதையடுத்து, 132 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 16 ஓட்டத்தில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிதிஷ் ராணா 21 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அஜிங்கியா ரகானே 44 ஓட்டத்தில் அவுட்டானார். 

தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், சாம் பில்லிங்ஸ் பொறுப்புடன் ஆடினர். சாம் பில்லிங்ஸ் 25 ஓட்டத்தில் வெளியேறினார்.

இறுதியில், கொல்கத்தா அணி 4 மட்டையிலக்குடுக்கு 133 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை கொல்கத்தா அணி பதிவுசெய்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »