Press "Enter" to skip to content

மகளிர் உலக கோப்பை – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மட்டையாட்டம் தேர்வு

மகளிர் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேச அணிகளை வீழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று மோதுகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.

அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதால் இதில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »