Press "Enter" to skip to content

சுவிஸ் ஓபன் அரையிறுதில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி

இறுதி போட்டியில் இந்தோனேஷிய வீரர் ஜோனதான் கிறிஸ்டி, இந்திய வீரர் பிரனாயுடன் மோதுகிறார்.

பாசெல்:

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்,  இந்தோனேஷிய வீரர் ஜோனதான் கிறிஸ்டியுடன் மோதினார். 

பாசெல் நகரில் இந்த போட்டி 55 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். எனினும் அடுத்த இரண்டு செட்களையும் 21-7, 21-13 என்ற கணக்கில்  ஜோனதான் கிறிஸ்டி கைப்பற்றி வெற்றி பெற்றார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் எச்.எஸ்.பிரனோய்,  இந்தோனேசிய வீரர் சினிசுகா கின்டிங்கை 21-19, 19-21, 21-18  என்ற செட்கணக்கில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

இதையடுத்து இன்று நடைபெறும் இறுதி போட்டியில் ஜோனதான் கிறிஸ்டி, இந்திய வீரர் பிரனாயுடன் மோதுகிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »