முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறின.
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டது.
அரை இறுதியில் நுழைய இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 274 ஓட்டத்தை குவித்தது. தொடக்க வீராங்கனை மந்தனா 71 ரன்னும், கேப்டன் மிதாலிராஜ் 68 ரன்னும், ஷபாலி வர்மா 53 ரன்னும், ஹர்மன் பிரீத் கவுர் 48 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 275 ஓட்டத்தை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா பின்னர் விளையாடியது. 50 சுற்றுகள் முடிவில் அந்த அணி 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 275 ஓட்டங்கள் அடித்தது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் இலக்கை எட்டி தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் 80 ஓட்டங்கள் குவித்தார். மற்றொரு வீராங்கனை மிக்னான் டு ப்ரீஸ் 52 ஓட்டங்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
இதன் மூலம் 3 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெற்றி பெற்றது.
முன்னதாக இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து- வங்காளதேசம் மோதின. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 6 மட்டையிலக்கு இழப்புக்கு 234 ஓட்டத்தை எடுத்தது. பின்னர் ஆடிய வங்காள தேசம் 134 ஓட்டத்தில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 100 ஓட்டத்தை வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar