Press "Enter" to skip to content

ஐபிஎல் 2022 – மில்லர், தெவாட்டியா அதிரடியில் லக்னோவை வீழ்த்தியது குஜராத்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட் ஜோடி 3வது மட்டையிலக்குடுக்கு 57 ஓட்டங்கள் சேர்த்தது.

மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத்-லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 6 மட்டையிலக்குடுக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. தீபக் ஹூடா 55 ரன், ஆயுஷ் பதோனி 54 ஓட்டத்தை எடுத்தனர்.

குஜராத் சார்பில் முகமது ஷமி 3 மட்டையிலக்கு எடுத்தார். வருண் ஆரோன் 2 மட்டையிலக்கு, ரஷித் கான் ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினர்.

159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விஜய் சங்கர் 4 ஓட்டத்தில் அவுட்டானார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 28 பந்தில் ஒரு சிகசர், 5 பவுண்டரி உள்பட 33 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 30 ஓட்டத்தில் வெளியேறினார். 

குஜராத் அணி ஒரு கட்டத்தில் 78 ரன்னுக்கு 4 மட்டையிலக்குடுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா அதிரடியாக ஆடினர். மில்லர் 30 ஓட்டத்தில் வெளியேறினார்.

இறுதியில், குஜராத் அணி 5 மட்டையிலக்கு இழப்புக்கு வெற்றிக்கு தேவையான  ரன்களை எடுத்து ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »