லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரஷீத் கான் 4 மட்டையிலக்கு கைப்பற்றி அசத்தினார்.
மும்பை
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 20 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி 63 ஓட்டத்தை எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். டேவிட் மில்லர் 26 ஓட்டத்தை எடுத்தார். ராகுல் திவாட்டியா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 145 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்கியது. குஜராத் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் மட்டையிலக்குடுகளை இழந்தது.
இறுதியில், லக்னோ அணி 13.5 சுற்றில் 82 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. தீபக் ஹூடா அதிகமாக 27 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.
குஜராத் அணி சார்பில் ரஷீத் கான் 4 மட்டையிலக்கு, யாஷ் தயாள், சாய் கிஷோர் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஷுப்மான் கில்லுக்கு வழங்கப்பட்டது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar